செய்திகள்
தி.நகர் ரெங்கநாதன் தெரு (கோப்பு படம்)

தி.நகர் தெருவில் உள்ள கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவு

Published On 2020-05-29 08:59 GMT   |   Update On 2020-05-29 08:59 GMT
சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ள 4ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளுடன் கடைகள், தொழிற்சாலைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அத்துடன் சில கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்தது. இதனால் சில பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டன.

இந்நிலையில் சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகளை மூடும்படி சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

கிருமி நாசினி தெளிக்காதது, தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்காதது போன்ற காரணங்களால் கடைகளை மூட சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
Tags:    

Similar News