செய்திகள்
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

Published On 2020-05-28 07:01 GMT   |   Update On 2020-05-28 07:01 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று 1040 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 2190 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது.

நேற்று 1040 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 2190 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 500கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 100.57 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 100.66 அடியாக உயர்ந்தது.

இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News