செய்திகள்
கோப்பு படம்

கோவை அருகே 9 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் கைது

Published On 2020-05-26 11:26 GMT   |   Update On 2020-05-26 11:26 GMT
கோவை அருகே 9 வயது சிறுமியிடம் அத்துமீறிய வாலிபரை பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை:

புதுச்சேரி மாநிலம் காரைக்காலை சேர்ந்தவர் மாதவன் (வயது 32). இவர் கோவை கோவில் பாளையம் அருகே உள்ள அன்டக்காபாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி உள்ளார்.

சம்பவத்தன்று இவரது வீட்டின் அருகே வசித்து வரும் 9 வயது சிறுமி தண்ணீரை வீட்டு முன்பு ஊற்றி விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது தண்ணீர் மாதவன் வீட்டு முன்பு வந்தது. உடனடியாக அவர் சிறுமியை கண்டித்தார்.

இதனை கேட்ட சிறுமியின் தாய் வெளியே வந்து பார்த்தார். அப்போது சிறுமியின் தாய்க்கும், மாதவனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் சிறுமியை அவரது தாய் வீட்டிற்கு அழைத்து சென்றார். சிறிது நேரத்துக்கு பின்னர் சிறுமி வீட்டு முன்பு நின்று விளையாடிக்கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த மாதவன் சிறுமியிடம் தகாத முறையில் அத்துமீறினார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்தார். அவர் இது குறித்து கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சிறுமியிடம் அத்துமீறிய மாதவனை கைது செய்தனர். அவர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News