செய்திகள்
மேட்டூர் அணைக்கு நேற்று 2118 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1889 கன அடியாக சரிந்தது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 2118 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1889 கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து கடந்த சில நாட்களாக குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரைவிட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று 100.36 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 100.43 அடியானது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று 2118 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 1889 கன அடியாக சரிந்தது.
அணையில் இருந்து கடந்த சில நாட்களாக குடிநீர் தேவைக்காக காவிரி ஆற்றில் 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. அணைக்கு வரும் தண்ணீரைவிட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
நேற்று 100.36 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 100.43 அடியானது. இனிவரும் நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.