செய்திகள்
ரஜினிகாந்த்

எங்கு இருக்கிறீர்களோ? அந்த நாட்டின் கட்டுப்பாடுகளை கடைப்பிடியுங்கள் - வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு, ரஜினி வேண்டுகோள்

Published On 2020-04-15 02:56 GMT   |   Update On 2020-04-15 03:08 GMT
நீங்கள் எந்த நாட்டில் வாழ்கிறீர்களோ, அந்த நாட்டின் அரசு கட்டுப்பாடுகளை கடைப்பிடியுங்கள் என வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-

வெளிநாடுகளில் வாழும் தமிழக மக்களுக்கு இந்த புதிய ஆண்டு ஒரு இனிதான ஆண்டாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

கொரோனா வைரசால் முழு உலகமும் பாதிப்படைந்து இருக்கிறது. இதில் இந்தியாவும், தமிழ்நாடும் விதிவிலக்கு அல்ல. உங்களை பிரிந்து வாழும் உறவினர்கள், குடும்பத்தினர்களுக்கு சதா நேரமும் உங்களை பற்றித்தான் சிந்தனை, கவலை.

நீங்கள் எந்த நாட்டில் வாழ்கிறீர்களோ, அந்த நாட்டின் அரசு எந்த கட்டுப்பாடுகள் விதித்து இருக்கிறார்களோ, அதை நீங்கள் தவறாமல் கடைப்பிடித்து உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இதுதான் நீங்கள் உங்கள் உறவினர்களுக்கும், குடும்பத்தினருக்கும் கொடுக்கிற இந்த ஆண்டின் மிகப்பெரிய பரிசு. நலமுடன் வாழுங்கள். கவலைப்படாதீர்கள். இதுவும் கடந்து போகும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 
Tags:    

Similar News