செய்திகள்
கைது

ஊரடங்கில் மொட்டை மாடியில் தூங்கிய பெண்ணை கட்டிப்பிடித்து அத்துமீறிய சைகோ வாலிபர்

Published On 2020-04-10 08:12 GMT   |   Update On 2020-04-10 08:12 GMT
ஊரடங்கு பரபரப்பை மீறி திருமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணிடம் வாலிபர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சென்னையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஊரடங்கு பரபரப்பை மீறி திருமங்கலம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணிடம் வாலிபர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா நகர் 14- வது தெருவில் 4 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் நேபாளத்தை சேர்ந்த வாலிபர் காவலாளியாக உள்ளார். மொட்டை மாடியில் உள்ள சிறிய அறையில் மனைவியுடன் தங்கி உள்ளார்.

இந்த குடியிருப்பில் நள்ளிரவில் புகுந்த வாலிபர் ஒருவர் மொட்டை மாடிக்கு சென்று தூங்கி கொண்டிருந்த காவலாளியின் மனைவியை திடீரென கட்டி பிடித்து முத்தம் கொடுத்து அத்துமீறி கற்பழிக்க முயன்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சல் போட்டார். பயந்து போன வாலிபர் ஒட்டம் பிடித்து தலைமறைவானார். இது பற்றி திருமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கேமரா காட்சிகளை போட்டு பார்த்தனர். அதில் டி.சர்ட்-டவுசர் அணிந்த வாலிபர் ஒருவர் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழையும் காட்சி பதிவாகி இருந்தது.

அதனை வைத்து துப்பு துலக்கினர். திருமங்கலம் உதவி கமி‌ஷனர் சிவக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் ஆகியோரது தலைமையிலான தனிப்படையினர் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த வாலிபரின் பெயர் ராமகிருஷ்ணன் என்பது தெரிய வந்தது. அமைந்தகரை திருவீதியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக போலீசார் கூறும்போது கைதான வாலிபருக்கு இதுதான் பொழுது போக்கு என்றும், சைகோ போல் அவர் சூற்றித்திரிந்ததும் தெரியவந்துள்ளது எனவும் போலீசார் தெரிவித்தனர்.

பால் போடுவது போல நடித்து திருட செல்லும் இவர் செக்ஸ் ஆசையில் இது போன்று அத்துமீறி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிவித்தனர். ராமகிருஷ்ணன் மீது கற்பழிப்பு வழக்கு போடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News