செய்திகள்
பாழாப்போன கொரோனாவை துரத்தணும்- சென்னை போலீசாரின் விழிப்புணர்வு பாடல்
சென்னை மாநகர போலீசார் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக கானா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
சென்னை:
சென்னை மாநகர போலீசார் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக கானா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
புளியந்தோப்பு போலீஸ் மாவட்டம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கானா பாடலை கானா பாடகர் பாலா பாடியுள்ளார். பாழாப்போன கொரனாவை துரத்தணும், அது யாருக்குமே வராமதா தடுக்கணும் என்று தொடங்கும் இந்த பாடல் 5 நிமிடங்கள் 22 வினாடிகள் ஓடுகிறது.
அதில் கானா பாடல் வீடியோவில் தமிழக அரசு சார்பிலும், சென்னை போலீஸ் சார்பிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
பாடி மேம்பாலத்தில் மேற்கொள்ளப்பட்ட போலீசாரின் விழிப்புணர்வு காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. எல்லோருமே கவனமாக இருக்கணும் வீண் வதந்தி பரப்புவதை தடுக்கணும் என்பது போன்ற வரிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோவை போலீசார் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளனர்.
சென்னை மாநகர போலீசார் கொரோனா விழிப்புணர்வு தொடர்பாக கானா பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
புளியந்தோப்பு போலீஸ் மாவட்டம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கானா பாடலை கானா பாடகர் பாலா பாடியுள்ளார். பாழாப்போன கொரனாவை துரத்தணும், அது யாருக்குமே வராமதா தடுக்கணும் என்று தொடங்கும் இந்த பாடல் 5 நிமிடங்கள் 22 வினாடிகள் ஓடுகிறது.
அதில் கானா பாடல் வீடியோவில் தமிழக அரசு சார்பிலும், சென்னை போலீஸ் சார்பிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
பாடி மேம்பாலத்தில் மேற்கொள்ளப்பட்ட போலீசாரின் விழிப்புணர்வு காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. எல்லோருமே கவனமாக இருக்கணும் வீண் வதந்தி பரப்புவதை தடுக்கணும் என்பது போன்ற வரிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோவை போலீசார் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளனர்.