செய்திகள்
வேளச்சேரி பீனிக்ஸ் மால்

வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-04-03 07:40 GMT   |   Update On 2020-04-03 07:40 GMT
சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி அந்த மாலில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னை:

சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள லைப்ஸ்டைல் கடையில் வேலைபார்த்த ஊழியர் உள்பட 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையொட்டி அந்த மாலில் பணிபுரியும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஊழியர்களையும் தனிமைப்படுத்தி வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த (மார்ச்) மாதம் 10-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை பீனிக்ஸ் மாலுக்கு சென்று வந்தவர்கள் தங்களுக்கு காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உதவி தேவைப்படுபவர்கள் 044-25384520, 044-46122300 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

பீனிக்ஸ் மாலில் வேலை பார்த்த அனைத்து ஊழியர்களும் உடனடியாக தங்களை பரிசோதனை செய்து தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம் என்றும் சுகாதாரத்துறை கூறி உள்ளது.
Tags:    

Similar News