செய்திகள்
மதுக்கூர் அருகே தந்தையின் கள்ளக்காதலியை கட்டையால் அடித்துக்கொன்ற சிறுவன்
பட்டுக்கோட்டை அருகே நண்பருடன் சேர்ந்து தந்தையின் கள்ளக்காதலியை கட்டையால் அடித்துக்கொன்ற சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
மதுக்கூர்:
பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவருக்கு திருமணமாகி மனைவியும், 17 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் அந்த சிறுவனின் தந்தைக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி கணவருடன் வசித்து வந்த 47 வயதுடைய ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
இதனால் தந்தையின் கள்ளக்காதலி மீது சிறுவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. சம்பவத்தன்று தனது நண்பருடன் தந்தையின் கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றார். அப்பொழுது கள்ளக்காதலை கைவிடும்படி அந்த பெண்ணிடம் சிறுவன் தகராறு செய்தார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிறுவன் நண்பருடன் சேர்ந்து உருட்டுக்கட்டையால் தந்தையின் கள்ளக்காதலி தலையில் சரமாரியாக அடித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். அந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சிறுவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவருக்கு திருமணமாகி மனைவியும், 17 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் அந்த சிறுவனின் தந்தைக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணமாகி கணவருடன் வசித்து வந்த 47 வயதுடைய ஒரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.
இதனால் தந்தையின் கள்ளக்காதலி மீது சிறுவனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. சம்பவத்தன்று தனது நண்பருடன் தந்தையின் கள்ளக்காதலி வீட்டுக்கு சென்றார். அப்பொழுது கள்ளக்காதலை கைவிடும்படி அந்த பெண்ணிடம் சிறுவன் தகராறு செய்தார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சிறுவன் நண்பருடன் சேர்ந்து உருட்டுக்கட்டையால் தந்தையின் கள்ளக்காதலி தலையில் சரமாரியாக அடித்து விட்டு தப்பி ஓடி விட்டனர். அந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சிறுவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.