செய்திகள்
கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு கோலத்தை படத்தில் காணலாம்.

கொரோனா வைரஸ் குறித்து கோலம் போட்டு விழிப்புணர்வு

Published On 2020-04-01 05:00 GMT   |   Update On 2020-04-01 05:00 GMT
கோவை துடியலூர் அருகே கொரோனா வைரஸ் குறித்து கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண்ணை பலரும் பாராட்டினர்.
துடியலூர்:

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். எனவே இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அரசு மற்றும் தன்னார்வலர்கள், பொதுமக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை சூரியா கார்டன் பகுதியை சேர்ந்த குமுதம் என்ற பெண் தனது வீட்டிற்கு முன்பு கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோலம் வரைந்து உள்ளார். அதில் ‘விழித்திரு, விலகி இரு, வீட்டில் இரு’ என்ற வாசகத்தை எழுதி இருந்தார். இதனை பார்த்த பொதுமக்கள் அந்த பெண்ணை பாராட்டினர்.

Tags:    

Similar News