செய்திகள்
144 தடை உத்தரவு எதிரொலி - தினமும் 4,500 மெகாவாட் மின்சாரம் பயன்பாடு குறைவு
ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு காரணமாக தற்போது 4,500 மெகாவாட் மின்சாரம் குறைவாக பயன்படுத்தப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை:
ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், தியேட்டர்கள், மால்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன.
இதனால் மின்சார பயன்பாடு பெருமளவு குறைந்துள்ளது. தினமும் 14,500 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்படும். ஆனால் தற்போது 4,500 மெகாவாட் மின்சாரம் குறைவாக பயன்படுத்தப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், தியேட்டர்கள், மால்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன.
இதனால் மின்சார பயன்பாடு பெருமளவு குறைந்துள்ளது. தினமும் 14,500 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தப்படும். ஆனால் தற்போது 4,500 மெகாவாட் மின்சாரம் குறைவாக பயன்படுத்தப்படுவதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.