செய்திகள்
கொரோனா வைரஸ்

மதுரையில் கொரோனாவுக்கு பலியான காண்டிராக்டரின் மூத்த மகனுக்கும் தொற்று உறுதி

Published On 2020-03-31 10:54 GMT   |   Update On 2020-03-31 10:54 GMT
மதுரையில் கொரோனாவுக்கு பலியான காண்டிராக்டரின் மூத்த மகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மதுரை:

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த 54 வயதான காண்டிராக்டர் கொரோனா தொற்று காரணமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது ரத்த மாதிரியும் பரிசோதனக்கு அனுப்பப்பட்டன.

இதில் கட்டிட காண்டிராக்டரின் மனைவி மற்றும் 2-வது மகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கடந்த சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் காண்டிராக்டரின் 25 வயது மூத்த மகனுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனி வார்டில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு 24 மணி நேர கண்காணிப்பில் டாக்டர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா பாதிப்பு வார்டில் காண்டிராக்டரின் மனைவி, 2 மகன்கள் மற்றும் ராஜபாளையத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் என 4 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News