செய்திகள்
வெளிநாட்டிலிருந்து தஞ்சை திரும்பிய வாலிபருக்கு கொரோனா வைரஸ் உறுதி
வெளிநாட்டிலிருந்து தஞ்சை திரும்பிய வாலிபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 42 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெஸ்ட்இன்டீஸ்சில் இருந்து சொந்தஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் தகவல் அறிந்து அவரது முகவரிக்கு சென்ற தஞ்சை சுகாதாரத்துறையினர் அவரது ரத்தமாதிரியை சோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது இன்று உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு தனிவார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சையில் வாலிபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது தஞ்சை மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்த 42 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெஸ்ட்இன்டீஸ்சில் இருந்து சொந்தஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் தகவல் அறிந்து அவரது முகவரிக்கு சென்ற தஞ்சை சுகாதாரத்துறையினர் அவரது ரத்தமாதிரியை சோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவருக்கு கொரோனா இருப்பது இன்று உறுதியாகியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு தனிவார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தஞ்சையில் வாலிபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது தஞ்சை மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.