செய்திகள்
கோப்பு படம்

தீ வைத்து எரிக்கப்பட்ட கள்ளக்காதலி பலி - கட்டிட மேஸ்திரி உயிருக்கு போராட்டம்

Published On 2020-03-07 14:07 GMT   |   Update On 2020-03-07 14:07 GMT
தர்மபுரி அருகே தீ வைத்து எரிக்கப்பட்ட கள்ளக்காதலி பலியாகியுள்ள நிலையில் கட்டிட மேஸ்திரிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையை அடுத்த மாதேமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி, கட்டிட மேஸ்திரி. இவருக்கு நீலா, ரத்தினம், சவுமியா என்று 3 மனைவிகள் இருந்தனர்.

இதில் 2-வது மனைவியுடன் பழனி பெங்களூருவில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். சவுமியா குழந்தைகளுடன் மாதே மங்கலம் கிராமத்தில் வசித்து வந்தார். காரிமங்கலம் தாலுகா திப்பம்பட்டி அருகே உள்ள ஏ.முருக்கம்பட்டியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி வேலுச்சாமி (வயது 27) என்பவர் மாதேமங்கலத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.

அப்போது சவுமியாவுக்கும், வேலுச்சாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. அவ்வப்போது கள்ளக்காதலியின் வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளார்.

இதேபோல கடந்த 4-ந் தேதி கள்ளக்காதலி வீட்டிற்கு வந்த வேலுச்சாமி அவரை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது தொந்தரவு செய்தால் தற்கொலை செய்து கொள்வதாக கூறி சவுமியா தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வேலுச்சாமி தீக்குச்சியை உரசி சவுமியா மீது போட்டார். உடனே சவுமியா தீ எரிந்த நிலையிலும் வேலுச்சாமியை கட்டிப்பிடித்தார். இதனால் 2 பேரும் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் வந்து 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சவுமியா இறந்தார். வேலுச்சாமிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அதியமான் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் நடத்திய விசாரணையின் போது பரபரப்பான தகவல்கள் வெளியானது.

கணவர் பழனி சவுமியாவை சொந்த ஊரில் விட்டு விட்டு பெங்களூரு சென்று விட்டார். இதனால் கேள்வி கேட்க ஆள் இல்லாததால் சவுமியாவுக்கு 4 பேருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. வேலுச்சாமியுடன் பழகியபோதே இன்னொருவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த வேலுச்சாமி சவுமியாவிடம் இதுபற்றி கேட்டபோது தகராறு ஏற்பட்டு கள்ளக்காதலியை கொலை செய்யும் அளவிற்கு வந்துள்ளது.

மேலும் வேலுச்சாமிக்கு சவுமியா 3-வது காதலி ஆவார். ஏற்கனவே அவர் 2 பெண்களுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.
Tags:    

Similar News