செய்திகள்
கைது

தூத்துக்குடியில் காதலியை கர்ப்பிணியாக்கி விட்டு ஏமாற்றிய வாலிபர் கைது

Published On 2020-03-05 14:57 GMT   |   Update On 2020-03-05 14:57 GMT
தூத்துக்குடியில் காதலியை கர்ப்பிணியாக்கி விட்டு வேறு பெண்ணுடன் திருமணம் செய்த இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:

நெல்லை பாளையங் கோட்டை சமாதானபுரம் காந்திநகரை சேர்ந்தவர் முருகதாஸ். இவரது மகன் ஜெயக்குமார் (வயது 28). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து பாளை மார்க்கெட்டில் மரக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 28 வயதுள்ள இளம்பெண்ணுக்கும் காதல் அரும்பியது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சென்றுள்ளனர்.தனிமையிலும் உல்லாசம் அனுபவித்துள்ளனர். இதில் அந்த இளம்பெண் கர்ப்பமடைந்தார். இதனால் அந்த இளம்பெண்ணின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து விபரம் கேட்டனர்.

அப்போது அவர் ஜெயக்குமாரை காதலித்து வருவது குறித்து கூறியுள்ளார். இதனால் இளம்பெண்ணின் பெற்றோர், ஜெயக்குமாரை முறைப்படி மாப்பிள்ளை கேட்டு பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதற்கு ஜெயக்குமாரும், அவரது பெற்றோரும் மறுத்து விட்டனர்.

இந்தநிலையில் ஜெயக்குமாருக்கு, தூத்துக்குடியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை திருமணம் முடிக்க நிச்சயம் செய்தனர். அவர்களுக்கு இன்று காலை தூத்துக்குடியில் வைத்து திருமணம் நடக்க இருந்தது. இந்த தகவல் ஜெயக்குமாரால் கர்ப்பம் அடைந்த இளம்பெண்ணுக்கு தெரியவந்தது. அவர் அது குறித்து உடனடியாக பாளை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ் பெக்டர் ரசீதா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி, ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று இரவே மகளிர் போலீசார் தூத்துக்குடி சென்று அங்கு இருந்த புதுமாப்பிள்ளை ஜெயக்குமாரை கைது செய்தனர்.

இதனால் இன்று நடக்க இருந்த திருமணம் நின்றது. புதுமாப்பிள்ளை ஜெயக்குமாரை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கிறார்கள்.

Tags:    

Similar News