செய்திகள்
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு

Published On 2020-03-03 03:53 GMT   |   Update On 2020-03-03 03:53 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று ஆயிரத்து 607 கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து ஆயிரத்து 663 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சேலம்:

கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 1-ந்தேதி மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது.

பின்னர் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று ஆயிரத்து 607 கனஅடியாக வந்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து ஆயிரத்து 663 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 750 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

அணைக்கு வரும் தண்ணீரைவிட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நேற்று 105.17 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் உயர்ந்து 105.19 அடியானது. இனிவரும் நாட்களில் நீர்வரத்து மேலும்அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News