செய்திகள்
தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் நியமனம்- கே.எஸ்.அழகிரி
தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவுரையின் பேரில் தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் ஜே.எம். ஆருண், நாசே.ஜெ.ராமச் சந்திரன், ஆ.கோபண்ணா, டி.என்.முருகானந்தம், பொன். கிருஷ்ணமூர்த்தி, டி.செல்வம், எஸ்.எஸ்.ராம சுப்பு, கே.தணிகாசலம், ஏ.பி. சூரிய பிரகாசம், எஸ்.கே.நவாஸ், எம்.பி. ரஞ்சன்குமார் ஆகிய 11 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இந்த குழுவின் முதல் கூட்டம் எனது தலைமையில் வருகின்ற மார்ச் 6-ந்தேதி காலை 11 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடை பெறும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.