செய்திகள்
பெண் குளிப்பதை எட்டி பார்த்த வாலிபர்- தட்டிக்கேட்ட கணவரை மீது தாக்குதல்
தவளக்குப்பம் அருகே பெண் குளிப்பதை எட்டி பார்த்த வாலிபர் குறித்து கணவர் தட்டிக்கேட்டதால் அவரை தாக்கியதில் காயம் அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
தவளக்குப்பம் அருகே டி.என்.பாளையம் புதுநகரை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது36), மினிவேன் டிரைவர். நேற்று இவரது மனைவி வீட்டின் வெளியே உள்ள குளியல் அறையில் குளித்து கொண்டு இருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தியின் உறவினரான வாலிபர் வெங்கடேசன் என்பவர் மறைந்து நின்று சத்தியமூர்த்தியின் மனைவி குளிப்பதை ரசித்து பார்த்தார். ஏதேச்சையாக பார்த்து விட்ட சத்தியமூர்த்தியின் மனைவி அலறல் சத்தம் போட்டார். மேலும் இதுபற்றி தனது கணவர் சத்தியமூர்த்தியிடம் முறையிட்டார்.
இதையடுத்து சத்தியமூர்த்தி இதுகுறித்து வெங்கடேசனிடம் தட்டிக்கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் செங்கலை எடுத்து சத்தியமூர்த்தியின் தலையில் தாக்கினார். மேலும் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சத்தியமூர்த்தி கரிக்கலாம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து வெங்கடேசனை தேடி வருகிறார்கள்.