செய்திகள்
திமுக

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக தரணிவேந்தன் நியமனம்

Published On 2020-02-15 07:06 GMT   |   Update On 2020-02-15 07:06 GMT
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக தரணிவேந்தன் நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சென்னை:

தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

திருவண்ணாமலை வடக்கு மாவட்டக் கழக செயலாளர் ஆர்.சிவானந்தம் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக மாவட்டக் கழக பணிகள் செவ்வனே நடைபெற எம்.எஸ்.தரணிவேந்தன் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தி.முக. பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட கழக அமைப்பின் பிற நிர்வாகிகள் அவருடன் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News