செய்திகள்
தற்கொலை

கொடைக்கானலில் பெண் தீக்குளித்து தற்கொலை- காப்பாற்ற சென்ற கணவர் படுகாயம்

Published On 2020-01-23 12:29 GMT   |   Update On 2020-01-23 12:29 GMT
கள்ளத் தொடர்பை கணவர் கைவிட மறுத்ததால் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் தந்திமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராணி (வயது 47). இவரது கணவர் பன்னீர்செல்வம். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் வினோத்குமார் (30), மகள் வின்சியா ஆகியோருடன் வசித்து வந்தார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பூம்பாறையைச் சேர்ந்த செல்வம் (57) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். செல்வமும் ஏற்கனவே திருமணம் ஆனவர். இந்நிலையில் செல்வத்துக்கு வேறு பெண்களுடன் பழக்கம் இருந்ததால் மனைவி கண்டித்துள்ளார்.

அதனை கைவிட மறுத்ததால் ராணி தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதை பார்த்த அவரது கணவர் செல்வம் காப்பாற்ற முயன்றார். இதில் 2 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அவர்கள் சேர்க்கப்பட்டனர். ஆனால் ராணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். செல்வம் கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் கொடைக்கானல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News