செய்திகள்
மனைவியை முதுகில் சுமந்து ஓடும் போட்டி நடைபெற்றபோது எடுத்த படம்.

மனைவியை கணவன் முதுகில் சுமந்து ஓடும் போட்டி

Published On 2020-01-20 02:11 GMT   |   Update On 2020-01-20 02:11 GMT
சுரண்டை அருகே வீரசிகாமணியில் நடந்த பொங்கல் விளையாட்டு விழாவில் ருசிகரமாக, மனைவியை கணவன் முதுகில் சுமந்து ஓடும் போட்டி நடைபெற்றது.
சுரண்டை :

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே உள்ள வீரசிகாமணி கிராமத்தில் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் 23-வது பொங்கல் விளையாட்டு விழா நடத்தப்பட்டது.

இதில் சிறுவர்-சிறுமியர்கள், பெரியவர்கள் கலந்துகொண்ட இசை நாற்காலி போட்டி, பானை உடைத்தல், உறியடித்தல், இளவட்டக்கல் தூக்குதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.

பொங்கல் விளையாட்டு விழாவின் சிகர நிகழ்ச்சியாக திருமணமான ஆண்கள் தங்களது மனைவியை முதுகில் சுமந்து ஓடும் போட்டி நடந்தது. இதில் மொத்தம் 5 தம்பதியினர் கலந்துகொண்டனர்.

ருசிகரமான முறையில் நடைபெற்ற இப்போட்டி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. வித்தியாசமான இந்த போட்டியானது, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Tags:    

Similar News