செய்திகள்
திருச்சி அருகே காளை முட்டியதில் மாட்டின் உரிமையாளர் பலி
திருச்சி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளை முட்டியதில் மாட்டின் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள ஆவாரங்காட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 595 காளைகள் பங்கேற்றன. 289 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.
இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் ராஜகிரி அருகே உள்ள சுக்காம்பட்டியை சேர்ந்த பழனியாண்டி(வயது 55) என்பவருக்கு சொந்தமான காளையும் அவிழ்த்து விடப்பட்டது
வாடிவாசலில் இருந்து வெளியேறி, வீரர்களிடம் சிக்காமல் திடலை கடந்து ஓடி வரும் போது காளையின் மீது கயிற்றை போட்டு பிடிப்பதற்காக பழனியாண்டி திடலை விட்டு காளை வெளியேறும் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக ஓடி வந்த மற்றொரு காளை பழனியாண்டியை முட்டித்தள்ளியது. இதில் காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே பழனியாண்டி இறந்தார். காளை முட்டியதில் மாட்டின் உரிமையாளர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள ஆவாரங்காட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 595 காளைகள் பங்கேற்றன. 289 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினர்.
இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் ராஜகிரி அருகே உள்ள சுக்காம்பட்டியை சேர்ந்த பழனியாண்டி(வயது 55) என்பவருக்கு சொந்தமான காளையும் அவிழ்த்து விடப்பட்டது
வாடிவாசலில் இருந்து வெளியேறி, வீரர்களிடம் சிக்காமல் திடலை கடந்து ஓடி வரும் போது காளையின் மீது கயிற்றை போட்டு பிடிப்பதற்காக பழனியாண்டி திடலை விட்டு காளை வெளியேறும் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த வழியாக ஓடி வந்த மற்றொரு காளை பழனியாண்டியை முட்டித்தள்ளியது. இதில் காயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே பழனியாண்டி இறந்தார். காளை முட்டியதில் மாட்டின் உரிமையாளர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.