செய்திகள்
கைதான தொழிலாளி பன்னீர்செல்வம்.

திருவெண்ணைநல்லூர் அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது

Published On 2020-01-12 15:06 GMT   |   Update On 2020-01-12 15:06 GMT
திருவெண்ணைநல்லூர் அருகே 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது அருங்குறுக்கை கிராமம். இங்குள்ள தெற்குத்தெருவை சேர்ந்த 12 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் அதிகாலையில் அங்குள்ள தெரு பைப்பில் தண்ணீர் பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வடக்குத்தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி பன்னீர் செல்வம் (53) என்பவர் மாணவியை பின்தொடர்ந்து சென்றார்.

பின்பு அவர் மாணவிக்கு பாலியல்தொல்லை கொடுத்தார். இதுகுறித்து அந்த மாணவி தனது தந்தையிடம் கூறி கதறி அழுதார். அதன்பேரில் அவர் திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். பின்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பன்னீர்செல்வத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தார்.

Tags:    

Similar News