செய்திகள்
டெல்டா மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:
வடகிழக்கு பருவமழை முடியும் தருவாயில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி கடல் பகுதியில் நிலவும் லேசான வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழையும் கடலோர மாவட்டங்களிலும் அதனை ஒட்டி உள்ள உள் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காரணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யம், கொள்ளிடம், சீர்காழி, சிதம்பரம், அண்ணாமலை நகர் ஆகிய பகுதிகளில் தலா ஒரு சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வடகிழக்கு பருவமழை முடியும் தருவாயில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
குமரி கடல் பகுதியில் நிலவும் லேசான வளிமண்டலத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசான மழையும் கடலோர மாவட்டங்களிலும் அதனை ஒட்டி உள்ள உள் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காரணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் லேசான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யம், கொள்ளிடம், சீர்காழி, சிதம்பரம், அண்ணாமலை நகர் ஆகிய பகுதிகளில் தலா ஒரு சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.