செய்திகள்
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

Published On 2019-12-24 05:02 GMT   |   Update On 2019-12-24 05:02 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று 3,939 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் அதிகரித்து 4,009 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில்பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

நேற்று 3,939 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் அதிகரித்து 4,009 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் 12 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 400 கன அடி தண்ணீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதலாக திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரியத் தொடங்கி உள்ளது.

நேற்று 119.74 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 119.27 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிய வாய்ப்பு உள்ளது.
Tags:    

Similar News