செய்திகள்
மூதாட்டி தங்கம்மாள்

பல்லடம் அருகே செல்லாத ரூபாய் நோட்டு வைத்திருந்த மூதாட்டி மரணம்

Published On 2019-12-16 04:26 GMT   |   Update On 2019-12-16 04:26 GMT
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செல்லாத ரூபாய் நோட்டு வைத்திருந்த மூதாட்டிகளில் ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்துள்ள பூமலூர் கிராமத்தை சேர்ந்த அக்காள் - தங்கையான ரங்கம்மாள் (75), தங்கம்மாள் (70 ) ஆகியோர் தனியாக வசித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் மதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்களை 46 ஆயிரம் வைத்து இருந்தனர். தங்களது மருத்துவ செலவுக்காக இதனை வைத்து இருந்ததாக கூறினார்கன். இந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்பதை அறிந்து சோகம் அடைந்தனர்.

இதனை அறிந்த திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன் இருவருக்கும் மருத்துவ உதவி மற்றும் முதியோர் பென்சன் கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.

சென்னையை சேர்ந்த தனியார் பள்ளி தாளாளர் மூதாட்டிகள் வைத்திருந்த பணத்துக்கு பதில் ரூ. 46 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மூதாட்டிகள் இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர். அதில் தங்கம்மாள் மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

பலரது உதவியால் சிகிச்சை பெற்று மீண்டு வந்த நிலையில் மூதாட்டிகளில் ஒருவர் மரணம் அடைந்தது கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
Tags:    

Similar News