செய்திகள்
மதுரையில் வங்கி அதிகாரி வீட்டில் 80 பவுன் நகை கொள்ளை
மதுரையில் வங்கி அதிகாரி வீட்டில் 80 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை:
மதுரை அழகிரி நகரை சேர்ந்தவர் தனசேகரன் (வயது58). இவர் மதுரையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 1-ந்தேதி குடும்பத்தினருடன் தனசேகரன் சென்னைக்கு சென்றுவிட்டார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 80 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர்.
சென்னையில் இருந்து மதுரை திரும்பிய தனசேகரன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு மோப்பநாயுடன் வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகை தடயங்கள் ஆய்வு செய்யப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட நகை-பணம் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும்.
கொள்ளையர்கள் குறித்து துப்பு துலக்க அந்த பகுதியில் பதிவான சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
வங்கி அதிகாரி தனசேகரன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
மதுரை அழகிரி நகரை சேர்ந்தவர் தனசேகரன் (வயது58). இவர் மதுரையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 1-ந்தேதி குடும்பத்தினருடன் தனசேகரன் சென்னைக்கு சென்றுவிட்டார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 80 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர்.
சென்னையில் இருந்து மதுரை திரும்பிய தனசேகரன் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு மோப்பநாயுடன் வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு கைரேகை தடயங்கள் ஆய்வு செய்யப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட நகை-பணம் மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும்.
கொள்ளையர்கள் குறித்து துப்பு துலக்க அந்த பகுதியில் பதிவான சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
வங்கி அதிகாரி தனசேகரன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.