செய்திகள்
சாலையில் அறுந்து விழுந்த மின் கம்பி.

பொள்ளாச்சியில் நடுரோட்டில் அறுந்து விழுந்த மின் கம்பி- பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

Published On 2019-12-07 05:55 GMT   |   Update On 2019-12-07 05:55 GMT
பொள்ளாச்சியில் நடுரோட்டில் மின் கம்பி அறுந்து விழுந்ததால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி ராஜாமில் சாலையில் ஓரத்தில் ஏராளமான மின் கம்பங்கள் உள்ளது. இங்குள்ள ஒரு மின் கம்பத்தின் மீது கடந்த சில நாட்களுக்கு முன் லாரி மோதி சேதம் ஏற்பட்டது. இதை மின்வாரிய ஊழியர்கள் சரிசெய்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் ராஜாமில் சாலையில் உள்ள மின்கம்பி திடீரென அறுந்து ரோட்டில் விழுந்தது.

அப்போது சாலையில் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், பெண்கள் நடந்துசென்றனர். மின்கம்பி அறுந்து விழுவதை பார்த்ததும் அவர்கள் அச்சத்தில் அங்கும் இங்கும் அலறியடித்த படி சிதறி ஓடி தப்பினர்.

கம்பி அறுந்து விழுவது தெரியாமல் சென்ற சிலரை அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் ஓடிச்சென்று காப்பாற்றினர்.

மின் கம்பி அறுந்து விழுந்தது குறித்து பொதுமக்கள் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்த மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்து கம்பியை அகற்றினர்.

மின்கம்பி அறுந்து விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News