செய்திகள்
கைது

பெண்ணை கற்பழித்து தற்கொலைக்கு தூண்டிய ஸ்டுடியோ அதிபர் கைது

Published On 2019-12-05 12:41 GMT   |   Update On 2019-12-05 12:41 GMT
சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து பெண்ணை கற்பழித்து தற்கொலைக்கு தூண்டிய ஸ்டுடியோ அதிபரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர்:

அரியாங்குப்பம் சுப்பையா நகர் பாரதிதாசன் வீதியை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி. இவரது மகள் தனலட்சுமி (வயது 31). இவர் பிளஸ்-2 வரை படித்து விட்டு புதுவை சின்னக்கடை காந்தி வீதியில் வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த மதுரை (37) என்பவர் நடத்தி வந்த போட்டோ ஸ்டுடியோ கடையில் வேலை பார்த்து வந்தார்.

தனலட்சுமிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு பெற்றோர் திருமண ஏற்பாடு செய்து வந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த  தனலட்சுமி திடீரென மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை தனலட்சுமி பரிதாபமாக இறந்து போனார்.

முன்னதாக நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் தனலட்சுமி மரண வாக்கு மூலம் அளித்தார். அதில், திருமணமாகி மனைவி  மற்றும் 2 குழந்தைகள் உள்ள நிலையில் ஸ்டுடியோ அதிபர் மதுரை கடந்த ஜனவரி மாதம் சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை கற்பழித்து விட்டதாகவும், இதனால் இன்னொருவரை திருமணம் செய்து துரோகம் இழைக்க விரும்பாததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக தனலட்சுமி மரண வாக்குமூலம் அளித்தார். 

இதையடுத்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். சாப்பாட்டில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கற்பழித்து தற்கொலைக்கு தூண்டிய ஸ்டியோ அதிபர் மதுரையை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வீட்டில் பதுங்கி இருந்த மதுரையை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News