செய்திகள்
வானிலை நிலவரம்

தமிழகம், புதுச்சேரியில் மேலும் இருநாட்கள் மழை நீடிக்கும் - வானிலை மையம்

Published On 2019-12-01 07:45 GMT   |   Update On 2019-12-01 07:45 GMT
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேலும் இருநாட்கள் மிதமான மழை நீடிக்கும் என அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டில் பருவமழை 8 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும்.

புதுச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.

கன்னியாகுமரி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.



ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புண்டு.

சூறாவளிக்காற்று வீசும் என்பதால் லட்சத்தீவு பகுதிகளுக்கு 2 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 8 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News