செய்திகள்
நாராயணசாமி

நாராயணசாமியை பார்க்க யாரும் ஆஸ்பத்திரி வர வேண்டாம் - முதல்வர் அலுவலகம் வேண்டுகோள்

Published On 2019-11-26 10:14 GMT   |   Update On 2019-11-26 10:14 GMT
சென்னை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் புதுவை முதலமைச்சர் நாராயணசாமி தற்போது பூரண ஓய்வில் இருக்க வேண்டி உள்ளதால் அவரை காண யாரும் சென்னைக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்து ஒரு செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

25.11.2019 அன்று மூட்டுவலி காரணமாக சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு டாக்டர்கள் பரந்துரையின் பேரில் சிறு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது முதல்-அமைச்சர் உடல்நிலை சீராக உள்ளது. இதனையடுத்து முதல்-அமைச்சர் இன்று ஆஸ்பத்திரியில் அலுவலக கோப்புகளை பார்வையிட்டு கையொப்பமிட்டார்.

அவருடைய உடல்நிலை சீராக உள்ளதால் இன்னும் ஓரிரு தினங்களில் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல்-அமைச்சர் தற்போது பூரண ஓய்வில் இருக்க வேண்டி உள்ளதாலும், விரைவில் ஆஸ்பத்திரியில் இருந்து புதுவை திரும்ப உள்ளதாலும் அவரை காண யாரும் சென்னைக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தன்னுடைய நலன் குறித்து அன்புடன் விசாரித்த அனைவருக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News