செய்திகள்
தற்கொலை

திருச்சி அருகே வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தற்கொலை

Published On 2019-11-21 16:36 GMT   |   Update On 2019-11-21 16:36 GMT
திருச்சி அருகே வரதட்சணை கொடுமையால் காதல் திருமணம் செய்து கொண்ட புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி:

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள சந்தனப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகள் நிவேதா (வயது 22). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் ஆடை தயாரிப்பு  நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே நிறுவனத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஆலத்தூரை சேர்ந்த ரமேஷ் (26) என்பவரும் வேலை பார்த்து வந்தார்.
அவர்கள் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. 

கடந்த மே மாதம் திருச்சியில் உள்ள கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு நிவேதா மன்னார்குடி அருகே உள்ள கணவர் வீட்டில் மாமனார், மாமியாருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கணவர் வீட்டில் நிவேதாவிடம் 10 பவுன் நகை கேட்டு வரதட்சணை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த நிவேதா தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார். நேற்று வீட்டில் திடீரென தூக்குமாட்டி தற்கொலை செய்தார். இது குறித்து அவரது தாயார் வசந்தி துறையூர் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் கணவர் ரமேஷ் மற்றும் குடும்பத்தினர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இன்று நிவேதா உடல் பிரேத பரி சோதனை செய்யப்பட்ட பிறகு குடும்பத்தினிடம் ஒப்படைக்கப்படுகிறது.
Tags:    

Similar News