செய்திகள்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

உள்ளாட்சியிலும் அ.தி.மு.க.வின் நல்லாட்சி தொடரும்- ராஜேந்திர பாலாஜி பேச்சு

Published On 2019-11-21 10:07 GMT   |   Update On 2019-11-21 10:07 GMT
உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளையும் பிடிக்கும் வகையில் நானும், நீங்களும் சேர்ந்து பணியாற்றுவோம் என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே ரெட்டிய பட்டியில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-

அரசை தேடி மக்கள் செல்லும் நிலை மாறி மக்களைத்தேடி அரசு என்ற நிலைக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. இன்னும் சில தினங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளையும் பிடிக்கும் வகையில் நானும், நீங்களும் சேர்ந்து பணியாற்றுவோம்.

அனைத்து வார்டுகளிலும் முழுமையாக வெற்றி பெற வேண்டும். மாவட்டத்தில் தி.மு.க. கட்சி ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை என்ற வரலாற்றை நாம் உருவாக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் தான் கட்சிக்கு பலம்.

பொதுமக்கள் முதலில் அனுகக்கூடியது உள்ளாட்சி பிரதிதிகளை தான். உள்ளாட்சியிலும் அ.தி.மு.கவின் நல்லாட்சி தொடர வேண்டும். இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர்.

இளைஞர்கள் அ.தி.மு.க. வில் கூட்டம் கூட்டமாக சேர்ந்து வருகின்றனர். உழைத்தால் உயர முடியும் என்ற நம்பிக்கை அ.தி.மு.க. கட்சியில் மட்டுமே உண்டு.

உழைக்க கூடியவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்கும் கட்சி அ.தி.மு.க. கட்சிதான்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் நரிக்குடி மேற்கு ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் பிரபு, நரிக்குடி ஒன்றிய செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் அம்மா சரவணன் மற்றும் நரிக்குடி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News