செய்திகள்
நடிகை காயத்ரி ரகுராம்- திருமாவளவன்

காயத்ரி ரகுராமை கைது செய்ய வேண்டும்- போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் புகார்

Published On 2019-11-18 12:34 GMT   |   Update On 2019-11-18 12:34 GMT
திருமாவளவன் குறித்து டுவிட்டரில் அவதூறாக பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராமை கைது செய்ய வேண்டும் என்று போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் புகார் அளித்துள்ளனர்.
கோவை:

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது-

திரைப்பட நடிகை காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் எங்கள் தலைவர் திருமாவளவன் எம்.பி.குறித்து அவதூறாக பதிவிட்டுள்ளார்.

அவர் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாக பேசி சாதி கலவரத்தை தூண்டி வருகிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் தலைவர்களை இழிவாக பேசிவரும் காயத்ரி ரகுராமை வன் கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News