செய்திகள்
குறை கண்டுபிடித்து பெயர் வாங்க நினைக்கிறார் மு.க.ஸ்டாலின் - அமைச்சர் உதயகுமார்
குறை கண்டுபிடித்து பெயர் வாங்க நினைக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
திருமங்கலம்:
தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் தொடர் ஜோதி மற்றும் நடைபயணம் 5-வது நாளாக திருமங்கலம் தொகுதி கல்லுப்பட்டியில் இன்று தொடங்கியது.
நடைபயணத்தை தொடங்கி வைத்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சித் தேர்தல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விருப்ப மனுக்கள் பெறப்பட்டு அதற்குப் பிறகு யாரால் தடைபெற்றது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.
எதிர்க்கட்சிகளும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். மு.க.ஸ்டாலினுக்கு இதிலென்ன சந்தேகம் என்று தெரியவில்லை. பாட்டு எழுதி பேர் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். பாட்டிலே குறை கண்டுபிடித்து பேர் வாங்க நினைப்பவர்களும் இருக்கிறார்கள். எந்த வகையை சேர்ந்தவர் இவர் என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.
அனேகமாக அவர் பாட்டு எழுதி பேர் வாங்குவதாக தெரியவில்லை. எழுதிய பாட்டில் குறை கண்டுபிடித்து அதன் மூலமாக பெயர் வாங்கலாம் என்று நினைக்கிறார். இப்போது அவருடைய பாட்டு எடுபடவில்லை. அவர் ஒரு மூத்த அரசியல்வாதியாக இருப்பவர். அனுபவம் தெரிந்தவர். ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக பேசுவது இந்த விஷயத்தில் நியாயமாக இருக்காது.
எழுதி வைக்கப்பட்ட நாடகம் தி.மு.க.வில் அரங்கேற்றப்படுகிறது. அங்கே வாரிசு அரசியல். இங்கே ஜனநாயக அரசியல். அங்கே இருப்பதெல்லாம் மன்னராட்சி. இங்கே இருப்பதெல்லாம் ஜனநாயக ஆட்சி.
தி.மு.க.வில் வாரிசு அரசியல், சர்வாதிகாரம், மன்னர் ஆட்சி என்று மகுடம் சூட்டிக் கொள்கிறார்கள். நம்மிடம் இருப்பது ஜனநாயகம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் தொடர் ஜோதி மற்றும் நடைபயணம் 5-வது நாளாக திருமங்கலம் தொகுதி கல்லுப்பட்டியில் இன்று தொடங்கியது.
நடைபயணத்தை தொடங்கி வைத்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சித் தேர்தல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விருப்ப மனுக்கள் பெறப்பட்டு அதற்குப் பிறகு யாரால் தடைபெற்றது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும்.
அரசியல் இயக்கம் நடத்துபவர்களுக்கும் நன்றாக தெரியும். முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் அறிவிப்புக்கு இணங்க தமிழகம் முழுவதும் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டிருக்கிறோம்.
எதிர்க்கட்சிகளும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். மு.க.ஸ்டாலினுக்கு இதிலென்ன சந்தேகம் என்று தெரியவில்லை. பாட்டு எழுதி பேர் வாங்குபவர்களும் இருக்கிறார்கள். பாட்டிலே குறை கண்டுபிடித்து பேர் வாங்க நினைப்பவர்களும் இருக்கிறார்கள். எந்த வகையை சேர்ந்தவர் இவர் என்பதை நீங்களே புரிந்துகொள்ளுங்கள்.
அனேகமாக அவர் பாட்டு எழுதி பேர் வாங்குவதாக தெரியவில்லை. எழுதிய பாட்டில் குறை கண்டுபிடித்து அதன் மூலமாக பெயர் வாங்கலாம் என்று நினைக்கிறார். இப்போது அவருடைய பாட்டு எடுபடவில்லை. அவர் ஒரு மூத்த அரசியல்வாதியாக இருப்பவர். அனுபவம் தெரிந்தவர். ஏதாவது பேசவேண்டும் என்பதற்காக பேசுவது இந்த விஷயத்தில் நியாயமாக இருக்காது.
எழுதி வைக்கப்பட்ட நாடகம் தி.மு.க.வில் அரங்கேற்றப்படுகிறது. அங்கே வாரிசு அரசியல். இங்கே ஜனநாயக அரசியல். அங்கே இருப்பதெல்லாம் மன்னராட்சி. இங்கே இருப்பதெல்லாம் ஜனநாயக ஆட்சி.
தி.மு.க.வில் வாரிசு அரசியல், சர்வாதிகாரம், மன்னர் ஆட்சி என்று மகுடம் சூட்டிக் கொள்கிறார்கள். நம்மிடம் இருப்பது ஜனநாயகம்.
இவ்வாறு அவர் கூறினார்.