செய்திகள்
சீமான்

எந்த காலத்திலும் பா.ஜனதா- காங்கிரசுடன் கூட்டணி வைக்க மாட்டோம்: சீமான்

Published On 2019-11-14 09:50 GMT   |   Update On 2019-11-14 09:50 GMT
எந்த காலத்திலும் பா.ஜனதா - காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
கும்பகோணம்:

கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சோமாலியா, எத்தியோபியா வெனிசுலா போன்று எங்களது நாடு போய் விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறோம். மீத்தேன், ஷேல் கேஸ் போன்ற திட்டங்களை அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சியின்போது கையெழுத்திட்டு விவசாயத்தை சீர்குலைத்து விட்டார்கள். அதனால் திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை. இது எங்கள் கட்சி கொள்கை முடிவு. நாங்கள் எப்போதும் தன்னிச்சையாகவே தேர்தல் களத்தில் விளையாடுவோம்



எந்த காலத்திலும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு வைத்துகொள்ள மாட்டோம். வருகிற உள்ளாட்சி தேர்தலில் ஆதித்தமிழர், தமிழ் தேசிய இயக்கம் மற்றும் தமிழக மக்களின் ஆதரவுடன் வேட்பாளரை அறிவித்து வெற்றி பெறுவோம்.

வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 117 ஆண்கள், 117 பெண்கள் வேட்பாளர்களை ஜனவரி மாதத்தில் அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News