செய்திகள்
தற்கொலை

தேனி அருகே கள்ளக்காதலியுடன் வாலிபர் ஓட்டம்- தாய் தற்கொலை

Published On 2019-11-04 10:47 GMT   |   Update On 2019-11-04 10:47 GMT
தேனி அருகே திருமணமான 7 மாதத்தில் கள்ளக்காதலியுடன் வாலிபர் மாயமானதால் தாய் தற்கொலை செய்து கொண்டார்.

தேனி:

தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள தம்மிநாயக்கன்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சேகர் மனைவி பத்மாவதி (வயது50). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் ஒரு மகனுக்கு கடந்த 7 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது. இதனால் சம்பவத்தன்று தனது கள்ளக்காதலியுடன் அவர் மாயமாகிவிட்டார். எனவே பெண் வீட்டார் பத்மாவதியை இது குறித்து கேட்டுள்ளனர்.

இதனால் மனமுடைந்த பத்மாவதி சம்பவத்தன்று தோட்டத்து கரையில் உள்ள சாலையோர மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சின்னகாளை என்பவர் கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேவதானப்பட்டி அருகில் உள்ள எருமநாயக்கன் பட்டியை சேர்ந்த செந்தில்குமார் மகள் திலகவதி (14). செந்தில்குமார் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அவரது மனைவி ஆனந்தம்மாள் ஒரு மகன் மற்றும் 2 மகள்களை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று திலகவதிக்கு வயிற்று வலி அதிகரித்ததால் டிராக்டருக்கு ஊற்றும் ஆயிலை குடித்து மயங்கி விழுந்தார். பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

இது குறித்து ஆனந்தம்மாள் கொடுத்த புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News