செய்திகள்
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு டிஜிட்டல் பேனர்- அப்பாவு மீது வழக்கு
பணகுடியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லாமல் கோர்ட்டு தடையை மீறி டிஜிட்டல் பேனர் வைத்ததாக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை:
ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவருமான அப்பாவுவின் மகன் திருமணம் சென்னையில் நடந்தது. நேற்று பணகுடியில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அப்பாவு உறவினர்கள் திருமண மண்டபம் அருகே 2 டிஜிட்டல் பேனர்கள் வைத்து இருந்தனர். இதற்கு முறைப்படி அனுமதி எதுவும் வாங்கவில்லை.
இதைத்தொடர்ந்து பணகுடி போலீசார் விரைந்து வந்து 2 டிஜிட்டல் பேனர்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் அனுமதி இல்லாமல் கோர்ட்டு தடையை மீறி டிஜிட்டல் பேனர் வைத்ததாக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், கிழக்கு மாவட்ட தி.மு.க. அவைத்தலைவருமான அப்பாவுவின் மகன் திருமணம் சென்னையில் நடந்தது. நேற்று பணகுடியில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அப்பாவு உறவினர்கள் திருமண மண்டபம் அருகே 2 டிஜிட்டல் பேனர்கள் வைத்து இருந்தனர். இதற்கு முறைப்படி அனுமதி எதுவும் வாங்கவில்லை.
இதைத்தொடர்ந்து பணகுடி போலீசார் விரைந்து வந்து 2 டிஜிட்டல் பேனர்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் அனுமதி இல்லாமல் கோர்ட்டு தடையை மீறி டிஜிட்டல் பேனர் வைத்ததாக முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.