செய்திகள்
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு குறைப்பு

Published On 2019-11-01 04:24 GMT   |   Update On 2019-11-01 04:24 GMT
மேட்டூர் அணையில் இருந்து நேற்று காலை காவிரியில் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மாலையில் தண்ணீர் திறப்பு 7 ஆயிரத்து 500 கன அடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

கடந்த 30-ந்தேதி 25 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 15 ஆயிரம் கன அடியாக சரிந்தது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 8 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து நேற்று காலை காவிரியில் 15 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மாலையில் தண்ணீர் திறப்பு 7 ஆயிரத்து 500 கன அடியாக குறைக்கப்பட்டது. கால்வாயில் 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நிரம்பி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த சில நாட்களாக 120 அடியாகவே நீடிக்கிறது. இனி வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைந்தால் அணை நீர்மட்டம் சரிய வாய்ப்புள்ளது.
Tags:    

Similar News