செய்திகள்
கொள்ளை

மளிகை கடையில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம்-40 பவுன் கொள்ளை

Published On 2019-10-23 06:33 GMT   |   Update On 2019-10-23 06:33 GMT
மளிகை கடையில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம்-40 பவுன் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர்:

வியாசர்பாடி, மார்க்கெட் எதிரே உள்ள சாலையில் மளிகை கடை நடத்தி வருபவர் செல்வம். இவர் கடையின் மேல் தளத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் தங்கி உள்ளார்.

பாதுகாப்பு கருதி அவர் வீட்டில் இருந்த ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் 40 பவுன் நகையை கடையில் வைத்து இருந்தார். நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிச் சென்றார்.

இன்று காலை கடையை திறக்க வந்த போது ‌ஷட்டர் பூட்டு உடைந்து கிடந்தது. கடையில் இருந்த ரூ. 1 லட்சம் ரொக்கம், 40 பவுன் நகை மற்றும் பொருட்களை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.

இது குறித்து வியாசர்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கடையில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் கொள்ளையனின் உருவம் பதிவாகி உள்ளது. அதனை வைத்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News