செய்திகள்
தீவிபத்து

சோழவரம் அருகே சிகரெட் குடோனில் தீ விபத்து

Published On 2019-10-16 10:20 GMT   |   Update On 2019-10-16 13:15 GMT
சோழவரம் அருகே சிகரெட் குடோனில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்குன்றம்:

சோழவரம் அருகே பண்டிகாவனூர் கிராமம் உள்ளது.

இங்கு கடந்த 5 ஆண்டுகளாக சிகரெட் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு சிகரெட் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்த குடோனில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பண்டல்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. காவலாளிகள் இரவு- பகலாக இந்த குடோனை பாதுகாத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் குடோனின் ஒரு பகுதியில் புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இது குறித்து தீயணைப்பு படையினருக்கு காவலாளிகள் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து செங்குன்றம், ஊத்துக்கோட்டை, பெரிய பாளையம், பொன்னேரி தீயணைப்பு நிலையங்களில் இருந்து 6 தீயணைப்பு வண்டிகள் வந்தன. 64 தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து தீயணைக்கும் பணி நடைபெற்றது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News