செய்திகள்
கோப்பு படம்

சென்னையில் கஞ்சா கடத்திய 4 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை

Published On 2019-10-16 09:14 GMT   |   Update On 2019-10-16 09:14 GMT
சென்னையில் கஞ்சா கடத்திய 4 பேருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை:

சென்னை நசரத்பேட்டை பகுதியில் கஞ்சா கடத்தியதாக செல்வகுமார், மதி, ரமேஷ், ராஜா ஆகிய 4 பேரை போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் கடந்த 27-11-2017 அன்று கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. கைதான செல்வகுமார் உள்பட 4 பேருக்கும் தலா 10 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ. 2 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். அபராதம் கட்டத்தவறினால் அவர்களுக்கு மேலும் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்தும் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News