செய்திகள்
சுரேஷ்

திருச்சி நகைக்கடை கொள்ளை- சுரேஷை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Published On 2019-10-14 07:23 GMT   |   Update On 2019-10-14 08:49 GMT
திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் சரண் அடைந்த சுரேஷை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க திருச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
திருச்சி:

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட சீராத்தோப்பு சுரேஷ், கடந்த 10-ம் தேதி செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். இதேபோல் இந்த கொள்ளைக்கு திட்டம் வகுத்து தந்த முருகன், பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். 

இந்நிலையில் நகைக்கடை கொள்ளை தொடர்பாக சரண் அடைந்த சுரேஷை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கும்படி தனிப்படை சார்பில் திருச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், 15 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்கப்பட்டிருந்தது. 

மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், 7 நாட்கள் சுரேஷை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கியது.
Tags:    

Similar News