செய்திகள்
லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை:
கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள கொழிஞ்சாம்பாறையை சேர்ந்தவர் ரோகித் (வயது20), அப்பு பிள்ளையூரை சேர்ந்தவர் திலேஷ் (20), சித்தூர் அருகே உள்ள அனித்தூரை சேர்ந்தவர் பிரதிஸ்லால் (20). நண்பர்களான இவர்கள் 3 பேரும் கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகின்றனர்.
திலேசும், பிரதிஸ்லாலும் கொழிஞ்சாம்பாறையில் உள்ள ரோகித்தின் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் பேசி கொண்டிருந்தனர். பின்னர் ரோகித் தனது நண்பர்களான திலேசையும், பிரதிஸ்லாலையும் மோட்டார் சைக்கிளில் கொழிஞ்சாம் பாறையில் இருந்து அவர்களது வீட்டிற்கு அழைத்து சென்றார்.
சூரிய பாறை வளைவில் வந்தபோது எதிரே பொள்ளாச்சியில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த லாரி மீது கண் இமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர்கள் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்கள் பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.