செய்திகள்
வசந்தகுமார் எம்.பி.

நாங்குநேரி தேர்தலில் அதிமுக பண பலத்தை காட்டும்: வசந்தகுமார் எம்.பி. பேட்டி

Published On 2019-09-29 11:40 GMT   |   Update On 2019-09-29 11:40 GMT
நாங்குநேரி தேர்தலில் அதிமுக பண பலத்தை காட்டுவார்கள். ஆனால் நான் செய்த சாதனைகளை கூறி தொகுதி மக்களிடையே ஓட்டுகளை சேகரிப்போம் என்று வசந்தகுமார் எம்.பி. கூறியுள்ளார்.

நெல்லை:

நெல்லையில் வசந்தகுமார் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாங்குநேரி பகுதியில் அதிகளவில் விவசாயிகள் உள்ளனர். விவசாயம் செழிப்பதற்காக பல்வேறு குளங்களை தூர்வாரும் பணிகளை செய்துள்ளேன். ரூ.369 கோடியில் தாமிர பரணி, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டம் கொண்டு வந்து பணிகள் நடைபெற்று வருகிறது.

நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் கொண்டு வந்துள்ளேன். தொகுதி மக்களின் பிரச்சினைகள் குறித்து அடிக்கடி அமைச்சர்களை சந்தித்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துள்ளேன். எனது எம்.எல்.ஏ. ஊதியத்தை பல ஏழை குழந்தைகள் படிப்பு செலவுக்காக செலவிட்டுள்ளேன்.

அ.தி.மு.க. இந்த தேர்தலில் பணபலத்தை காட்டுவார்கள். ஆனால் நான் செய்த சாதனைகளை கூறி தொகுதி மக்களிடையே ஓட்டுகளை சேகரிப்போம். இதில் நாங்கள் நிச்சயமாக வெற்றியும் பெறுவோம்.

இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தியை அழைத்துள்ளோம். இடைத்தேர்தல் ஒரு போர்க்களம் போன்றது. நாங்கள் வலுவான வீரரை நிறுத்தியுள்ளோம். உட்கட்சி பிரச்சினைகள் கால போக்கில் சரியாகி விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News