செய்திகள்
ஒகேனக்கல்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 27 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

Published On 2019-09-26 04:18 GMT   |   Update On 2019-09-26 04:18 GMT
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 27 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இன்று 21-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஒகேனக்கல்:

கர்நாடக அணைகளில் இருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டாலும் காவிரி ஆறு வரும் பாதைகளில் பெய்து வரும் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

நேற்று முன்தினம் நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக இருந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 40 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. இன்று காலை நீர்வரத்து 27 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

மெயின் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளிலும் வெள்ள நீர் செம்மண் நிறத்தில் கொட்டுகிறது.

ஒகேனக்கல்லில் இன்று 21-வது நாளாக பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இன்று 50-வது நாளாக தொடர்ந்து ஒகேனக்கல் அருவி மற்றும் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடித்து வருகிறது என்றாலும் சுற்றுலா பயணிகள் இன்று தடையை மீறி மெயின் அருவியில் குளித்தனர்.

Tags:    

Similar News