செய்திகள்
கோப்பு படம்

ஒரே நாளில் கசந்த திருமண வாழ்க்கை - நகையை பறித்துக் கொண்டு மனைவியை துரத்திய கணவன்

Published On 2019-09-23 10:47 GMT   |   Update On 2019-09-23 10:47 GMT
திருமணம் ஆன மறு நாளே மனைவியின் நகைகளை பறித்துக் கொண்டு அவரை வீட்டை விட்டு துரத்திய கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்:

திண்டுக்கல் பால கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த அனிதா என்பவர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது:-

எனக்கும் சிவசங்கர் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது நகை மற்றும் சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டது. ஆனால் ஒரே ஒரு நாள் மட்டும் கணவராக வாழ்ந்த சிவசங்கர் தொழில் தொடங்க எனது நகையை பெற்றுக் கொண்டார். அதன் பிறகு என்னுடன் சேர்ந்து வாழவில்லை. மேலும் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார்.

இதை தட்டிக் கேட்ட எனது தாய் மற்றும் தந்தையை அவதூறாக பேசி தாக்க முற்பட்டார். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் சிவசங்கர் தலைமறைவாகி விட்டதாக கூறினர். அதன் பின்னர் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே சிவசங்கர் மீது நடவடிக்கை எடுத்து நகை மற்றும் பொருட்களை மீட்டுத் தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News