செய்திகள்
ஜிகே வாசன்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு த.மா.கா. ஆதரவு - ஜிகே வாசன்

Published On 2019-09-22 11:39 GMT   |   Update On 2019-09-22 11:39 GMT
நாங்குநேரி தொகுதி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு த.மா.கா. ஆதரவு அளிப்பதாக ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் வேட்பாளர்களை த.மா.கா ஆதரிக்கிறது. மேலும் இரண்டு தொகுதிகளிலும் த.மா.கா.வின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அ.தி.மு.கவினுடைய வெற்றியை உறுதி செய்யக் கூடிய வகையில் களப் பணியாற்றுவார்கள்.

இன்று தமிழக அரசு, அதனுடைய முதல்வரும், துணை முதல்வரும் மக்கள் விரும்பக்கூடிய வளர்ச்சித் திட்டங்களை கொடுத்து அதனை பெருநகரம் முதல் கிராமம் வரை சென்றடையக் கூடிய உயர்ந்த நிலையை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

அது மட்டுமல்ல தமிழக முதல்வரின் சமீபத்திய வெளிநாட்டுப் பயணமானது தமிழகம் தொழில் துறையில் மேலும் முன்னேறவும், வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தி கொடுப்பதற்கும் உறுதுணையாக அமைந்துள்ளது.

தமிழககத்தின் பொருளாதாரமும், முதலீடுகளும் சாதகமான சூழலில் இருப்பதாக பொது நிதி மற்றும் கொள்கை தேசிய நிறுவன பேராசியர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

தேசிய வளர்ச்சி விகிதமான 6.81 சதவீதத்தைவிட தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது.

எனவே தமிழக அரசு விவசாயிகளின் எதிர் பார்ப்பை நிறைவேற்றும் விதமாகவும், தொழில் துறையில் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவும், வேலை வாய்ப்பை உருவாக்கித்தர வேண்டும் என்பதற்காகவும் மேற்கொண்டு வரும் முயற்சிகள் தமிழக மக்களுக்கு பெரும் பயன் தரும் என்பது வெளிப்படுகிறது.

இதுவே நடைபெற இருக்கின்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களின் வெற்றிக்கு அடித்தளம்.

எனவே நடைபெற இருக்கின்ற விக்கிரவாண்டி, நாங்கு நேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு த.மா.கா முழு அதரவு அளித்து, வாக்கு சேகரித்து அவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News