செய்திகள்
சைதாப்பேட்டையில் வக்கீல் வீட்டில் 150 பவுன் நகை- ரூ.2½ லட்சம் மாயம்
சைதாப்பேட்டையில் வக்கீல் வீட்டில் 150 பவுன் நகை மற்றும் ரூ.2½ லட்சம் பணம் மாயமானது குறித்து எதிர்வீட்டுக்காரர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சைதாப்பேட்டை போலீஸ் நிலையம் அருகில் உள்ள தர்மராஜா கோவில் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. வக்கீலான இவர் சைதாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
அதில், தனது வீட்டில் பீரோவில் இருந்த 150 பவுன் நகை, ரூ.2½ லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தெய்வநாயகி ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகை-பணம் காணாமல் போனபோது, வக்கீல் சத்தியமூர்த்தியின் மனைவி ஜோதி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். நகை-பணம் காணாமல் போனது பற்றி அடுக்குமாடி குடியிருப்பில் எதிர்வீட்டில் வசிப்பவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றி கருத்து தெரிவித்த போலீசார் நகை காணாமல் போனது தொடர்பாக விசாரித்து வருகிறோம் என்றனர். இரண்டு வீட்டுக்கும் பிரச்சனை ஏதும் உள்ளதா? என்பது பற்றியும் விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.
சைதாப்பேட்டை போலீஸ் நிலையம் அருகில் உள்ள தர்மராஜா கோவில் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. வக்கீலான இவர் சைதாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.
அதில், தனது வீட்டில் பீரோவில் இருந்த 150 பவுன் நகை, ரூ.2½ லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தெய்வநாயகி ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகை-பணம் காணாமல் போனபோது, வக்கீல் சத்தியமூர்த்தியின் மனைவி ஜோதி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். நகை-பணம் காணாமல் போனது பற்றி அடுக்குமாடி குடியிருப்பில் எதிர்வீட்டில் வசிப்பவர் மீது குற்றம் சாட்டியுள்ளார். இதுபற்றி கருத்து தெரிவித்த போலீசார் நகை காணாமல் போனது தொடர்பாக விசாரித்து வருகிறோம் என்றனர். இரண்டு வீட்டுக்கும் பிரச்சனை ஏதும் உள்ளதா? என்பது பற்றியும் விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.