செய்திகள்
கைது

20 ஆண்டுகளுக்கு முன்பு மோசடி வழக்கில் தேடப்பட்டவர் கைது

Published On 2019-09-19 09:39 GMT   |   Update On 2019-09-19 09:39 GMT
போலியான ஆவணங்கள் கையெழுத்திட்டு பணம் மோசடி செய்தவரை 20 ஆண்டுகளுக்கு பின் சென்னை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாமரைச் செல்வன். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு கூட்டுறவு சங்கத்தில் கிளர்க்கின் உதவியாளராக பணியாற்றி வந்தார். அப்போது அவர் போலியான ஆவணங்கள் கையெழுத்திட்டு பணம் மோசடி செய்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து நாகப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமரைச்செல்வனை தேடி வந்தனர். அவர் வெளிநாட்டுக்கு தப்பி விடாமல் இருக்க அவரை தேடப்பட்ட குற்றவாளி என்று அறிவித்தனர். இந்த நிலையில் தாமரைச் செல்வன் நேற்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்ல வந்தார்.

குடியுரிமை அதிகாரிகள் அவருடைய பாஸ்போர்ட்டை சோதனை செய்தபோது அவர் தேடப்படும் குற்றவாளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் தாமரைச் செல்வனை கைது செய்தனர். பின்னர் நாகப்பட்டினம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
Tags:    

Similar News